Wednesday, March 13, 2013

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம் அமீரக காயிதேமில்லத் பேரவை அபுதாபி மண்டல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினத்தை முன்னிட்டு அமீரக காயிதேமில்லத் பேரவையின் அபுதாபி மண்டல நிர்வாகிகள்,உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும்  கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
திட்டச்சேரி சாதிக் பைஜி கிராஅத்துடன் துவங்கிய நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டலச் செயலாளர் அதிரை எ.ஷாஹுல் ஹமீத் தலைமை வகித்தார்.அவர் தனது தலைமையுரையில் 65 ஆண்டுகாலம் முஸ்லிம் லீக் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல என்பதை விளங்கினாலே முஸ்லிம் லீகின் அவசியம் அனைவருக்கும் தெரியும்.அப்படிப்பட்ட  இயக்கத்தின் பணியில் நம்மையும் சேர்த்துக் கொள்வதால் நமக்குத்தான் பெருமை என்பதை உணர்ந்து அனைவரும் முஸ்லிம் லீகில் இணைவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 மக்கள் தொடர்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு,முஸ்லிம் லீகில் இளைஞர்களும்,மாணவர்களும் அதிகளவில் தங்களை இணைத்துக் கொண்டு அரசியல் தெளிவு பெற்று வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டினார்.மேலும் அமீரகத்தில் இருக்கும் முஸ்லிம் லீகர்கள் காயிதேமில்லத் பேரவையில் இருந்து சிறப்பாக சேவையாற்றுவதையும் சுட்டிக்காட்டி அமீரகத்தில் இருக்கும் சமுதாய மக்கள் அனைவரும் காயிதேமில்லத் பேரவையில் இணைத்து செயலாற்ற அழைப்பு விடுத்தார்.

நிகழ்ச்சியில் திட்டச்சேரி சாதிக்,கிளியனூர் கலீலுர் ரஹ்மான்,அதிரை.அப்துல் காதர்,சென்னை காதற் மீரான்,திருவாடுதுறை ரபீக் பைஜி,மதுக்கூர் ஜாபர் சாதிக்,வடகறை நூருல்லாஹ் பைஜி,திருவாடுதுறை முத்துமுஹம்மது,ஆகியோர் முஸ்லிம் லீகின் சமுதாய பணிகள் குறித்தும், கல்விப் பணிகள் குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ததோடு முஸ்லிம் லீகில் இணைந்து செயலாற்றுவதன் நன்மைகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர்.


காயிதேமில்லத் பேரவையின் அமைப்புச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் தனது கருத்துரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த நாட்டில் உருவான தினத்தில் இருந்து இன்று வரை தெளிவான பாதையில் சமுதாயத்தை வழி நடத்திச் செல்கிறது.சமுதாயத்திற்கு முஸ்லிம் லீக் பெற்றுத்தந்த உரிமைகளை விவரித்ததோடு,முஸ்லிம் லீக் மட்டும்தான்  என்றைக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கு மட்டுமே பாடுபடும் இயக்கம் என்பதையும், இடைப்பட்ட காலங்களில் உருவான எந்த இயக்கங்களாலும் எந்தப்பயனும் இன்று வரை சமுதாயம் அடைந்ததில்லை என்பதையும் ஆதாரத்தோடு விளக்கி, சமுதாய இளைஞர்களை மூலைச்சலவை செய்யும் விதத்தில் பேசி அவர்களின் உணர்வுகளைத் தூண்டி இயக்கம் நடத்தும் நிலையை உணர்ந்து இன்று எண்ணற்ற சமுதாய இளவல்கள் தாய்ச்சபையை நோக்கி வந்து கொண்டிருப்பதை சுட்டிக்காடிப் பேசினார். 

இறுதியாக காயல்பட்டினம்  மெளலவி ஹுஸைன் மக்கி மஹ்லரி முஸ்லிம் லீகின் சேவை சமுதாயத்திற்கு எந்தளவிற்கு தேவை என்பதை உணர்ந்து அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்து நமது உரிமைகளை பெற்றிட வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து முஸ்லிம் லீக் நிறுவன நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தங்களை காயிதேமில்லத் பேரவையில் உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். நிகச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி நிறுவன தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

அபுதாபி ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற அமீர காயிதேமில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி,துணைத் தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார்,பொதுச்செயலாளர் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.




















No comments:

Post a Comment

Photobucket