Monday, February 4, 2013

வி.களத்தூரில் நடந்த கலவரம் - நம் சமுதாய சொந்தங்களின் சோகத்தை போக்க முன்னிற்பது யார்?



          கடந்த சில தினங்களுக்கு முன்னாள் பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்ப்பட்ட கலவரத்தில் நமது சமுதாய சகோதரர்கள் பாதிக்கப்பட்டு 70 பேர் வரை சிறைவாசம் அனுபவித்து வருகின்ற வேதனையான தகவல் அறிந்து தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையில் பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பிரச்சனையை ஆய்வு செய்து,பிரச்சனையை சுமுகமாக தீர்க்கவும் கடந்த வெள்ளிக்கிழமை காலை பெரம்பலூர் நோக்கி பயணப்பட்டனர்.

 காலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்மீஸ் அஹமதுவை சந்தித்து ஏறத்தாழ ஒன்னே முக்கால் மணி நேரம் சம்பவத்தின் நிலை குறித்து விவாதித்த்னர்.அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் இதுபோன்ற சம்பவங்களில் மற்ற அமைப்பினர் ஈடுபட்டு மிகவும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது.ஆனால் முஸ்லிம் லீக் மட்டுமே எல்லா நிலைகளிலும் பொறுமையையும்,அமைதியையும் கடைபிடித்து சட்ட ரீதியாக அனைத்தையும் அணுகுவதாக குறிப்பிட்டதோடு முஸ்லிம் லீக் தலைவர்கள் வந்தால் தான் எப்பொழுதுமே இணக்கமான சூழலையும் ஏற்ப்படுத்த முடிகிறது,அதனால் நீங்களே இந்தபிரச்சனைக்கு தீர்வு காண்டு யாரை எப்படி விடுவிப்பது என்பதை அமைதிக்கூட்டத்தில் சொல்லுங்கள் அதன் படி செயல்படுகிறோம் என்று சொன்னார்.இதே கருத்தை மாவட்ட டி.ஆர்.ஓ.ரேவதியும் சுட்டிக்காட்டி முஸ்லிம் லீக் கட்சியினர் மட்டும்தான் சட்டத்தின் மூலம் எதையும் அணுகுவதாக குறிப்பிட்டார்.

இவர்களுடனான சந்திப்பை முடித்துக் கொண்டு வி.களத்தூரில் இருக்கும் ஜமாஅத்தார்களையும்,சமுதாய பெரியவர்களையும் சந்தித்து சம்பவத்தின் தாக்கத்தை கேட்டறிந்து அவர்களில் பலரும் காவல்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக்கு தாங்களும் வருவதற்கு முனைப்பு காட்ட,எல்லோரையும் அழைத்துச் செல்ல முடியாது இன்கிற நிலையில் அவர்களில் சிலரை மட்டும் அழைத்துக் கொண்டு மாவட்ட எஸ்.பி.டாக்டர்.ஜே.கே.ராஜசேகரனை சந்திக்க புறப்பட்டு சென்று விட்டோம்.

அங்கும் மாவட்ட காவல் துறை ஆய்வளர் வி.களத்தூர் சகோதரர்களை வைத்துக் கொண்டே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சில குறிப்பிட்ட அமைப்புக்கள் தான் வித்திடுவதாக குறிப்பிட்டதோடு இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே விதிவிலகாக பாதிக்கப்பட்டவர்களின் மீட்புக்காக போராடுவதை குறிப்பிட்டு,இனி இந்த கலவரத்தின் விளைவால் ஏற்ப்பட்டு விட்ட அசம்பாவிதங்களுக்கான தீர்வு காண முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் நல்லாசிரியர் விருது பெற்ற அல்லாபிச்சை மட்டும் தான் என்னை சந்திக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தார்.

மேலும் வரக்கூடிய பிப்ரவரி 6-ம் தேதி அமைதிக் கூட்டம் நடத்தலாம் அதை உங்கள் வசதிக்கேற்ப நேரத்தையும் நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள், அங்கு யார் யாரை விடுவிக்கனும் எப்படி இதற்கான தீர்வை அடைவது என்பதையும் நீங்களே முன்னின்று செய்யுங்கள் என்று காவல் துறை ஆய்வாளர் கேட்டுக் கொண்டார். இந்த உரையாடல்களை எல்லாம் அப்போது நேரில் கண்ட வி.களத்தூரைச் சார்ந்த சித்தீக்,சாதிக் உள்ளிட்ட சகோதரர்களும் தாங்கள் முஸ்லிம் லீகர்கள் இல்லை என்றாலும் முஸ்லிம் லீக்கின் அணுகுமுறைகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதிகாரிகளின் வட்டத்தில் எவ்வாறன நன்மதிப்பும் மரியாதையும் உள்ளது என்பதை உணராமல் இருந்திருக மாட்டார்கள்.

இப்படி அரசு தரப்பில் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நீண்டு விடவே நாமும் வி.களத்தூரில் நடைபெறும் ஜும்ஆ பயானை நீட்டிக்க கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களும் அவ்வாறே செய்தார்கள், நாமும் கடைசியில் ஜும்ஆ தொழுகையில் சேர்ந்து தொழுகையை முடித்து விட்டு மீண்டும் அதே பள்ளிவாசலில் யாரும் கலைந்து சென்றுவிடாமல் அனைவரும் ஆவலுடன் நடந்த பேச்சுவார்த்தையின் விபரங்களை கேட்க சோகத்தோடு அமைதியாக அமர்ந்திருந்தனர்.

திரண்டிருந்த அனைவர்களுக்கும் மத்தியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அங்கும் ஒன்னேமுக்கால் மணி நேரம் தனது பேச்சுவார்த்தையின் விபரத்தை தெரிவித்ததோடு என்றைகும் இது போன்ற அவல நிலைக்கு வழிகாட்டாத இயக்கம் தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதையும்,அவ்வாறே ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படின் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு சமூக நல்லிணக்கத்தை கட்டி காப்பதும் முஸ்லிம் லீக் தான் என்பதை அரசு அதிகாரிகளே சொல்லியதையும் சுட்டிக்காட்டி  இதை தெளிவாக உணர்ந்ததின் காரணத்தினால் தான் நாம் உள்ளே சென்றவர்களை எல்லாம் வெளிக்கொணரும் காரியத்தையும் செய்து வருவதை தன்னடக்கத்தோடு தெரிவித்து,மீண்டும் 6-ம் தேதி நடக்க இருக்கும் அமைதி பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு எட்ட தானும் வருவதாக குறிப்பிட்டு விடை பெற்றார்.

 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் ஏ. அல்லாபிச்சை, செயலாளர் ஜி. சர்புதீன், பொருளாளர் ஏ. முஹம்மது அலி, மாநில பொதுக் குழு உறுப்பினர் முஹம்மது காசீம் ஆகியோருடன் இந்த ஆய்வுக்குழுவில் திருச்சி மாநகர மாவட்டத் தலைவர் உமர் ஃபாரூக், செயலா ளர் பீர் முஹம்மது, மாநகர இளை ஞர் அணிஅமைப்பாளர் அப்துல் ரஹ்மான்,ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

 - களத்திலிருந்து CC மீடியா குழு 


No comments:

Post a Comment

Photobucket