துபாய் : துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப்
ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 16.01.2012 திங்கட்கிழமை மாலை லோட்டஸ் ஹோட்டலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, முத்தமிழ்ச் சங்க தலைவர் மோகன் உள்ளிட்டோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முஹம்மது யூசுஃப் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். துபாய் தமிழ்ச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு மலர் நினைவுப் பரிசாக அளிக்கப்பட்டது.
ஏற்புரை நிகழ்த்திய திருமாவளவன் அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். அமீரகத்துக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் வருகை புரிந்த போது அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தினை நினைவு கூர்ந்தார்.
மேலும் சிறுபான்மை மக்களுடன் தனக்குள்ள இணக்கமான நட்பினை விவரித்தார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழக எம்பிக்கள் குழு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு வருகை புரியவேண்டியதன் அவசியம் குறித்தும் வளைகுடாத் தமிழர்களின் நிலை குறித்து அறிய வேண்டியதையும் அமீரக காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் எடுத்துரைத்ததை ஆமோதித்து அது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைஅக்துபாய் லேண்ட்மார்க் ஹோட்டல் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, அஜ்மான் ஆரிஃபின் குழும மேலாணமை இயக்குநர் ஆரிஃப், ஈமான் அமைப்பின் துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தேரா டிராவல்ஸ் மேலாளார் ஹாஜா முஹைதீன், அஜ்மான் ஹமீது, அம்மாபட்டிணம் அப்துல் ரஹ்மான், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், அப்துல்லாஹ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
சுட்டியை சொடுக்கி படியுங்கள்
ReplyDelete---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர் < ----
.