Tuesday, October 25, 2011

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களுக்கு அமீரக காயிதெ மில்லத் பேரவை பாராட்டு

தமிழகத்தில் நடை பெற்று முடிந்த உள் ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீகர்களுக்கு அமீரக காயிதெ மில்லத் பேரவை பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அமீரக காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தனித்துப் போட்டியிட்டு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் கணிசமான அளவு வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற் றுள்ள அனைவரையும் அமீரக காயிதெ மிலலத் பேரவை மனதார பாராட்டி மகிழ்கிறது.

இதற்காக கடுமையாக உழைத்த அத்துணை நல் லுள்ளங்களுக்கும், ஒத்து ழைப்பு நல்கிய ஜமாஅத்தி னர்களுக்கும் நன்றி தெரி வித்துக் கொள்கிறது.

மேலும், தனிச் சின்னத் தில் போட்டியிடும் முடிவு இளம் தலைமுறையின ருக்கு உற்சாகத்தை வழங்கி யுள்ளது. இத்தகைய முடிவுக்கு காரணமாக இருந்த தாய்ச்சபையின் தன்னிகரில்லாத தலைவர் முனீருல் மில்லத் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் மற்றும் நிர்வாகிகளுக் கும் அமீரக காயிதெ மில்லத் பேரவை நன்றியும், பாராட்டையும் தெரிவித் துக் கொள்கிறது.

இவ்வாறு குத்தாலம் லியாகத் அலி தனது அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Photobucket