Monday, September 16, 2013

அமீரக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளராக கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ் நியமனம்

துபாய், செப்.16- கீழக்கரை ஹமீத் சமத் ஃபத்தாஹ் அமீரக காயிதே மில்லத் பேரவையின் ஒருங் கிணைப்பாளராக அதன் தலை வர் குத்தாலம் லியாக்கத் அலி அவர்களால் நியமிக்கப்பட் டுள்ளதாக பொதுச் செயலா ளர் திருப்பனந்தாள் முஹம்மது தாஹா அறிவித் துள்ளார்.



கீழக்கரை நடுத் தெருவைச் சேர்ந்தவர் ஹமீத் சமத் ஃபத்தாஹ். 30 வயதாகும் இவர் துபையில் மின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கீழக்கரையின் முது பெரும் முஸ்லிம் லீகர்களும், முன்னாள் தலைவர்களுமான மர்ஹூம் (இன்சூரன்ஸ்) ஷாஹூல் ஹமீத் அவர்கள், மற்றும் ஹஸன் அப்துல் காதர் ஆகியோரின் பேரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகத்துறை, மற்றும் சமூக வலை தளங்களில் மிகப் பெரும் ஆர்வமும், அறிவாற் றலும் கொண்டவர். பிளாக் ஸ்பாட் மற்றும் இணைய தளங்களை உருவாக்கி நடத்தி வருகிறார். கீழக்கரையின் முன்னணி இணைய தளங் களில் ஒன்றான கீழக்கரை டாட் காம் என்ற இணைய தளத்தின் ஆசிரியருமாவார். கீழக்கரை சம்பந்தமான அனைத்து இணைய தளங்களையும் ஒரே அப்ளிகேஷனில் ஐ போன், ஐ பேட் களில் காணும் புதுமையை முதலில் புகுத்தியவர்.

இவரை, பேரவை ஊடகத் துறை செயலாளர் சாதிக் அவர் களுடன் இணைந்து பணியாற்ற, ஊடகத் துறை ஒருங்கிணைப் பாளராக அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் லியாகத் அலி, நியமித்திருப்பதாக அதன் பொதுச் செயலாளர் திருப் பனந்தாள் முஹம்மது தாஹா அறிவிப்பு வெளியிட்டுள்ள னர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபுபக்கர் மற்றும் சர்வ தேச காயிதே மில்லத் பேரவை ஒருங்கிணைப் பாளர் அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்துள் ளனர்.

அமீரக காயிதே மில்லத் பேரவை அவர் வருகைக்கு வாழ்த்துக்களையும், வரவேற் பினையினையும் தெரிவித்துக் கொண்டிருப்பதாக அதன் பொருளாளர் எஸ்.கே.எஸ்.ஹமீ துர் ரஹ்மான் தெரிவித்துள் ளார்.

நன்றி: மணிச்சுடர் 

No comments:

Post a Comment

Photobucket